சிபிஎம் சார்பில் புதுச்சேரியில் ஜூலை-15 கண்டன ஆர்ப்பாட்டம்

 விலை உயர்வு., வேலையின்மை மற்றும் மத்திய – மாநில அரசுகளின் மக்கள் கொள்கைகளைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுச்சேரி தலைமை தபால் நிலையம் முன்பு ஜூலை-15 பெரும்திரள் ஆர்ப்பாட்டம்

மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் விலைவாசி குறைத்துவிடு என்பது பொய்யாய்போனத்து அரிசி, கோதுமை, பருப்பு, தக்காளி, இறைச்சி என உப்பு முதல் கற்புரம் வரை அணைத்துப் பொருகட்களின் விலை கிடுகிடு என எறிஉள்ளது. மேலும் 2014-ம் ஆண்டு கடலைப்பயிறு கிலோ 72.ரூ தற்போது 166.ரூ., உளுத்து   கிலோ 92.ரூ தற்போது 160.ரூ., எண்ணை  கிலோ 126.ரூ தற்போது 198.ரூ என இரண்டு ஆண்டில் இந்த அளவிற்க்கு விலைகள் உயர்ந்துள்ளது.

பெட்ரோல்-டீசல் விலைகள் உலகச் சந்தையில் குறையும் போது இந்தியாவில் மட்டும் உயர்ந்து கொண்டே இருந்தது. ஒரு பேரல் கச்சா எண்ணை 130 டாலராக இருந்தபோது இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.69-க்கு விற்றது, ஆனால் உலகச் சந்தையில் ஒரு பேரல் விலை 39 டாலராக குறைந்தபோது பெட்ரோல் விலை 59.ரூபாய்யாகத்தான் விற்பனை செய்யப்பட்டது. ரூ.25-க்கு விற்கவேண்டிய பெட்ரோல் மோடி அரசு 59.ரூபாய்க்கு விற்று மக்கள் பணத்தை வாரி சுருட்டியது.

இந்திய நாட்டு பெரும் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் வரிசலுகையாக கொடுத்துக்கொண்டு, ஏழை ஏளிய மக்களை கொள்ளையடிக்கும் அரசாக மோடி அரசு உள்ளது. கருப்புபணம் மீட்கப்பட்டு ஓவ்வொரு நபருக்கும் ரூ.15 லட்சம் பணம் கிடைக்கும் என்பது காற்றில் கறைந்த கற்புறம் போல் ஆனது.
வேலையில்லா பட்டதாரிகள் வேலைதேடி தெருதெருவாக அலைந்து கொண்டிருக்கும் போது, மத்திய அரசு துறைகளில் 13 லட்சம் பணி இடங்கள் காலியாக உள்ளது. கிராமபுற மக்களை வாழவைக்க இடதுசாரி கட்சிகளின் முயற்சினால் 100 நாள் வேலைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்தவேலை வாய்ப்பு திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் இதற்காண நிதி ஒதுக்கீட்டை மோடி அரசு வேட்டி சுறுக்கி உள்ளது. இதனால் கிராமபுற மக்கள் மேலும் ஏழைகளாக மாற்றப்பட உள்ளனர்.
இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கதையாகி வருகிறது, மோடி ஆட்சிக்குவந்து 100-வது நாள் கொண்டாடியபோது 5 ஆயிரம் விவசாயிகள் தற்கொலைக்கு ஆளாகி மாண்டுபோனார்கள். விவசாயிகள் உற்பத்திசெய்யும் பொருட்களுக்கு 50% ஆதரவு விலை வழங்கவேண்டும் என்று டாக்டர்.ஆ.ளு.சாமிநாதன் அவர்களின் பரிந்துறையை அமுல்படுத்த மோடி அரசு தயாராகயில்லை. விவசாயிகளுக்கு நிலிக்கண்ணீர் வடிக்கும் வேலையைத்தான் அரசு செய்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரி மக்களின் அடிப்படையன பல கோரிக்கைகள் நிரைவேற்ற படமால் உள்ளது, குறிப்பக உள்ளாட்சி அமைப்புகளுக்காண தேர்தலை நடத்த புதுச்சேரி அரசு மறுத்துவருகிறது., வேலைவாய்ப்பை உருவாக்க எந்த நடவடிக்கையும் இல்லை, ஐ.வு.பார்க் அமைக்க நிலம்ஆர்ஜிதம் செய்தும் நடவடிக்கை இல்லை., 21ஃ2லட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளனர்., விவசாயத்தை பாதுகாக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை ரூ.20 கோடி அளவிற்கு கரும்பு விவசாயிகளுக்கு அரசு அளிக்க வேண்டிய தொகை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை., 100 நாள் வேலைத்திட்டம் கடந்த ஆண்டில் 20 நாட்கள்கூட வேலை வழங்கப்படவில்லை., பல லட்சம் தொழிலாளர்கள் வேலைசெய்யும் முறைசாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படவிலை., இயற்கை வளங்களை பாதுகாக்க, நிலத்தடி நீரை சேமிக்க அரசு நடவடிக்கை இல்லை., அரசு பள்ளிகளை மேம்படுத்தி-பாதுகாக்க., தனியார் கல்வி நிறுவனங்களின் விதிமுறை இல்லாத கட்டணங்களை முறைபடுத்திட அரசு தயக்கம் கட்டுகிறாது.
எனவே மத்திய-மாநில அரசுகளின் மக்கள் விரோத கொள்கையினை கண்டித்து., விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த., பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைக்க., அத்தியாவசிய பொருட்களை அனைவருக்கும் ரே~ன் கடைகள் மூலம் வழங்க., விவசாயிகளையும், மக்களையும் பாதிக்கும் முன்பேர வர்த்தகத்தைத் தடைசெய்ய., உயிர்காக்கும் மருத்து விலைகளைக் கட்டுப்படுத்திட.,
வேலைவாய்ப்புகளை பெருக்கிட., உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஜூலை-15 அன்று காலை 10.30 மணிக்கு புதுச்சேரி தலைமை தாபல் நிலையம் முன்பு “பெருந்திரல் ஆர்ப்பாட்டம்”.
 இவண்
இரா.ராஜாங்கம்
 செயலாளர்
குறிப்பு: இந்த ஆர்ப்பாட்டத்தை தங்களின் நாளிதழில்/ தொலைக்காட்சியில் வெளியிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Reply