புதுச்சேரியில் அடுக்குமாடி குடியிருப்புக்கு மின்இணைப்பு…! வாலிபர், மாதர் சங்க போராட்டம் வெற்றி….!!

புதுச்சேரி சட்டப் பேரவை எதிர்க்கட்சி தலை வர் தொகுதியில் பல மாதங் களாக மின் இணைப்பு இல் லாத அடுக்குமாடி குடி யிருப்பில் வசித்த 38 குடும் பங்களுக்கு மாதர், வாலிபர் சங்கங்களின் முன்முயற்சி யால் மின்சாரம் வழங்கப் பட்டது.புதுச்சேரி காமராஜர் தொகுதிக்குட்பட்ட சுதந்திர பொன்விழா நகர் உள்ளது. இந்த நகரில் மொட்டை தோப்பு என்ற பகுதியில் குடி யிருந்த 38 குடும்பங்களுக்கு குடிசை மாற்று வாரியத் தால் அடுக்கு மாடி குடி யிருப்பு வீடுகள் கட்டப்பட் டது. சுமார் ரூ. 1 கோடிக்கு மேற்பட்ட தொகையில் கட்டப்பட்ட குடியிருப்பு கள் கடந்த ஓராண்டுக்கு முன்பு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அந்த குடியிருப்பு களுக்கு மின் இணைப்பு மட்டும் கொடுக்கப்பட வில்லை. நகரையொட்டி யுள்ள இந்த குடியிருப்பில், மட்டும் மின் இணைப்பு இல்லாமல் கடந்த 18 மாதங் களாக 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருட்டி லேயே வாழ்ந்து வந்தனர்.இத்தகவலை அறிந்த அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுவை பிரதேச துணை தலைவர் வி.சுமதி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரதேச பொருளாளர் சர வணன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, ஏன் மின் இணைப்பு பெறுவதற்கான முயற்சிகள் எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினர். மேலும், மின் துறை அதி காரிகளை சந்தித்து கேள்வி எழுப்பிய சங்க நிர்வாகி களிடம், குடிசை மாற்று வாரியம் மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9 ஆயிரத்தி 460 செலுத்த வில்லை, அதனாலே மின் இணைப்பு வழங்கப்படவில்லை என்று கூறினர். பின்னர் குடிசை மாற்று வாரியத்தின் அதிகாரிகளை சந்தித்து டிஒய்எப்ஐ தலைவர்கள், ஓரிரு நாட்களில் அத் தொ கையை மின்சாரத் துறைக்கு செலுத்த வில்லை என்றால் பொது மக்களிடம் வாலிபர் சங்கம் உண்டியல் மூலம் வசூலித்து அத்தொகையை செலுத்தும் என்று கூறினர்.ஆர்ப்பாட்டம்குடிசை மாற்று வாரி யம், மின்துறையின் அலட்சி யத்தை கண்டித்தும், பாதிக் கப்பட்ட மக்களுக்கு உட னடியாக மின்சாரம் வழங் கக்கோரியும் மாதர் சங்கம், வாலிபர் சங்கங்கள் சார்பில் செப்டம்பர்3அன்று புதுச் சேரி பெருமாள் கோவில் வீதியில் உள்ள மின் துறை யின் இளநிலை பொறியா ளர் அலுவலகம் முன்பு கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.மின் இணைப்பு குடிசை மாற்று வாரியம் உடனே மின்துறைக்கு செலுத்த வேண்டிய தொகை ரூ.9ஆயிரத்து 460-ஐ செ லுத்திய உடனே மின் துறை ஒரு வாரத்திற்குள் குடியிருப் புகளுக்கு மின் இணைப்பு வழங்கியது.கண்ணீர் மல்க நன்றிமின் இணைப்பு பெற்ற குடியிருப்பு மக்கள் சார்பில் வாலிபர், மாதர் சங்க தலை வர்களுக்கு நன்றி தெரிவிக் கும் கூட்டம் சுதந்திர பொன் விழா நகரில் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட துணை தலைவர் ராஜாங்கம், மாதர், வாலிபர் சங்க தலைவர்கள் சுமதி, சரவணன், பிரபுராஜ், விஜய், அழகப்பன், தமிழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து அங்கு வசிக்கும் கலா என்பவர் கூறியதாவது:நீண்ட காலமாக இங்கு வசித்து வருகிறோம். தினந் தோறும் இரவு நேரங்களில் இருட்டில் பிள்ளைக ளோடு கொசுக்கடியில் தூங்க முடியாமல் தவித்து வந்தோம். தேர்ந்தெடுக்க படுவதற்கு முன்பு உடனே மின்சாரம் பெற்று கொடுப் பேன் என்றெல்லாம் வாக் குறுதி அளித்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான வெ.வைத்தியலிங்கம் தேர் வான பிறகு இந்த பக்கம் வருவதே இல்லை. மக்கள் பிரதிநிதிகளே எங்களை பற்றி கவலைப்படவில்லை. நாங்களும் மின்சாரத் துறைக்கு கோரிக்கை வைத் தும் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் வாலிபர், மாதர் சங்கம் எங்களுக்காக போராடி மின் இணைப்பு பெற்று தந்துள்ளது. போராட்டம் நடத்த எங் களுக்கு அழைப்பு கொடுத்த போது நாங்களும் உதாசீனப் படுத்தினோம். அப்போராட் டத்தில் ஒருவர் கூட பங்கேற் காதது மனவருத்தத்தை அளிக்கிறது. அதையும் மீறி எங்களது வாழ்க்கையில் ஒளி அமைத்து கொடுத்ததை நாங்கள் வாழ்நாள் முழுவ தும் மறக்கமாட்டோம் என்று வாலிபர் சங்க தலைவர்களுக்கு கண்ணீர் மல்க நன்றியை தெரிவித்தார்.

Leave a Reply