இளைஞர்கள் விரோத அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி போராட்டம்

இளைஞர்கள் விரோத அக்னிபாத் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி இடதுசாரிகள்,விடுதலை சிறுத்தை கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய இரானுவத்தில் 4 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்களை தேர்வு செய்யும் அக்னிபாத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். தேசத்தின் ரானுவபணியை கொச்சைப்படுத்தும் ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை எதிர்த்தும், போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாக இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசிபஞ்சாலை எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஆ.மு.சலீம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின முதன்மை செயலாளர் தேவ.பொழலன், மார்க்சிஸ்ட் லெனிஸ்ட் மாநில செயலாளர் சோ.பாலசுப்பரமணியன், மற்றும் இடதுசாரிகட்சி தலைவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட திரளானோர் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக 8 ஆண்டுகால மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.

Leave a Reply