அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 15வது மாநாடு

மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை முழுவதும் திறந்து அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசை மாதர் சங்க பிரதேச மாநாடு வலியுறுத்தியுள்ளது.

அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச 15வது மாநாடு முல்லைநகரில் உள்ள அரசு ஊழியர் சம்மேளனத்தில் உள்ள வி.சந்திரா நினைவரங்கத்தில் சனிக்கிழமை (ஜூன்-18) நடைபெற்றது. மாநாட்டிற்கு பிரதேச தலைவர் இளவரசி, நிர்வாகிகள் முனியம்மாள், சிவசங்கரி ஆகியோர் தலைமைக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டு கொடியை பிரதேசக்குழு உறுப்பினர் பெரியநாயகி ஏற்றிவைத்தார். சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் சுதாசுந்தரராமன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சங்கத்தின் தமிழ்மாநில  செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி மற்றும் பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள் டாக்டர் ஷீத்தல்நாயக், சரளா, விஜயா, கோட்டக்குப்பம் பகுதி கவுன்சிலர் பர்கத்சுல்தனா ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினார்கள்.

பிரதேச செயலாளர் ஈ.சத்தியா மாநாட்டு வேலை அறிக்கையை வாசித்தார்.பொருளாளர் டி.கலையரசி வரவுசெலவு அறிக்கையை தாக்கல் செய்தார். இருதியாக மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் தமிழ்மாநில தலைவர் எஸ்.வாலண்டினா மாநாட்டை நிறைவு செய்து பேசினார். சங்க நிர்வாகிகள் மாரிமுத்து, கோமதி உள்ளிட்ட திரளான பெண் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தீர்மானம்

புதுச்சேரியில் ஆண்டுகணக்கில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறந்து, கேரளா,தமிழ்நாடு போன்ற மாநிலங்களை போல்  அரிசி, கோதுமை,சர்க்கரை உள்ளிட்ட 14 அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வழங்க வேண்டும்.

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ்சிலிண்டர்விலை உயர்வுகளை உடணடியாக மத்திய பாஜக அரசு குறைக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதுச்சேரி அரசு பாலியல் புகார் கமிட்டியை உடணடியாக அமைக்க வேண்டும். புதுச்சேரியில் மேலும் மதுபான தொழிற்சாலைகளை திறக்க அனுமதி வழங்குவதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply