
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > கட்டுரைகள் > இறுதி வரைப் போராடு – பகத்சிங்
இறுதி வரைப் போராடு – பகத்சிங்
posted on

சுகதேவுக்குக் கடிதம் (வழக்கு விசாரணை முடிவுக்கு வந்துவிட்டது. தீர்ப்பு எந்நாளிலும் எதிர்பார்க்கப்படலாம். சுகதேவ், தனக்கு நாடு கடத்தல் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்த்தார். அவரைப் பொறுத்தவரை, சிறையில் இருபதாண்டுகளுக்கும் மேல் இருக்க வேண்டும் என்கிற நினைப்பே மிகவும் வெறுப்பூட்டியது. ஒருக்கால் தனக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால். தான் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாக பகத்சிங்கிற்கு சுகதேவ் கடிதம் எழுதினார். ஒன்று விடுதலை செய்யப்பட வேண்டும், இல்லையெனில் தூக்கிலிடப்பட வேண்டும். இரண்டுக்கும் இடையில் நடுவழி என்று எதுவும் இல்லை.சுகதேவ் கடிதத்தைக் கண்ணுற்றதும் பகத்சிங் மிகவும் வெகுண்டெழுந்தார். “சேவை செய், இன்னல்களை ஏற்றுக்கொள், இறுதி வரைப் போராடு.” இதுவே, பகத்சிங் நிலையாகும். “துன்பத்திலிருந்து தப்பித்துக்கொள்ள முயல்வது கோழைத்தனம்” என்று பகத்சிங் கூறினார். இந்தக் கடிதத்தின் மூலமாக, தியாகி பகத்சிங்கின் மனவோட்டம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ள மேலும் ஒரு வாய்ப்பு.)அன்புள்ள சகோதரனே,
அவர்களது துன்ப உணர்ச்சியையும் அவர்களது கதாபாத்திரங்களின் அசாதாரண உயர்நிலையையும் நாம் வியந்து போற்றவும் செய்தோம். ஆனால் அதன் காரணத்தைக் கண்டறிய ஒருபோதும் நாம் கவலைப் பட்டதில்லை. துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அவர்களின் மனவுறுதியே அவர்களது இலக்கியத்திலும் அவர்களது கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்திலும் அசாதாரணமான உயர்வையும் ஆழத்தையும் கொடுத்தது என்றே நான் சொல்வேன். இயற்கையின் பாற்பட்ட அல்லது உறுதியான அடிப்படை ஏதுமின்றி, பகுத்தறிவிற்குப் புறம்பான, கடவுள் நம்பிக்கையை நமது வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் போது, நாம் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாக மாறி விடுகிறோம். எல்லாவிதத்திலும் புரட்சியாளர்களாய் இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், நம்மால் துவக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு எப்பொழுதும் நாம் தயாராய் இருக்க வேண்டும். அதனாலேயே நாம் நம்மை புரட்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம்.மிகப் பெரும் சமூகப் பண்புகளாகிய குற்றத்தையும் பாவத்தையும் பற்றி அனுபவப் பூர்வமாய் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஒருவர் சிறையிலேயே, சிறையில் மட்டுமே பெறமுடியும் என்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.
Nallasivan Memorial Building,
Ajeez Nagar, Reddiarpalayam,
Puducherry – 605010.
Telephone: 0413-2200100, 9443003353