
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) > ஆவணங்கள் > கட்டுரைகள் > இறுதி வரைப் போராடு – பகத்சிங்
இறுதி வரைப் போராடு – பகத்சிங்
posted on
உன்
You Might Also Like
இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு நேர்ந்துள்ள பேராபத்து!
December 30, 2025
புதுச்சேரி தொழிற்சங்கத் தந்தை டி. கே. இராமனுஜம்
December 22, 2025
வந்தே மாதரம் 150 : மோடி கொண்டாடுவது ஏன்…?
December 21, 2025


அவர்களது துன்ப உணர்ச்சியையும் அவர்களது கதாபாத்திரங்களின் அசாதாரண உயர்நிலையையும் நாம் வியந்து போற்றவும் செய்தோம். ஆனால் அதன் காரணத்தைக் கண்டறிய ஒருபோதும் நாம் கவலைப் பட்டதில்லை. துன்பத்தைத் தாங்கிக் கொள்ளும் அவர்களின் மனவுறுதியே அவர்களது இலக்கியத்திலும் அவர்களது கதாபாத்திரங்களின் குணச்சித்திரத்திலும் அசாதாரணமான உயர்வையும் ஆழத்தையும் கொடுத்தது என்றே நான் சொல்வேன். இயற்கையின் பாற்பட்ட அல்லது உறுதியான அடிப்படை ஏதுமின்றி, பகுத்தறிவிற்குப் புறம்பான, கடவுள் நம்பிக்கையை நமது வாழ்வில் ஏற்றுக் கொள்ளும் போது, நாம் ஏளனத்திற்கும் கேலிக்கும் உரியவர்களாக மாறி விடுகிறோம். எல்லாவிதத்திலும் புரட்சியாளர்களாய் இருப்பதில் பெருமைப்பட்டுக் கொள்ளும் நம்மைப் போன்றவர்கள், நம்மால் துவக்கப்பட்ட போராட்டங்களின் மூலம் நமக்கு நாமே வரவழைத்துக் கொண்ட கஷ்டங்கள், கவலைகள், வேதனைகள் துன்பங்கள் அனைத்தையும் தாங்கிக் கொள்வதற்கு எப்பொழுதும் நாம் தயாராய் இருக்க வேண்டும். அதனாலேயே நாம் நம்மை புரட்சியாளர்கள் என்று அழைத்துக் கொள்கிறோம்.மிகப் பெரும் சமூகப் பண்புகளாகிய குற்றத்தையும் பாவத்தையும் பற்றி அனுபவப் பூர்வமாய் ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஒருவர் சிறையிலேயே, சிறையில் மட்டுமே பெறமுடியும் என்று நான் உனக்குச் சொல்ல விரும்புகிறேன்.





