புதுச்சேரி வாக்காளர்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி வேண்டுகோள்

Cpim 2024 (2)18வது நாடாளுமன்றத் தேர்தல் புதுச்சேரி வாக்காளர்களுக்கு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழுவின் வேண்டுகோள்.
பாசிச பாஜக அரசை வீழ்த்துவோம்!
மக்கள் நல அரசை மத்தியில் அமைத்திடுவோம்!!
இந்தியா கூட்டணி வேட்பாளர் திரு வே.வைத்திலிங்கம் அவர்களுக்கு வாக்களித்து மோடி அரசை வீழ்த்துவோம்!!!
ஏன் என்.ஆர் காங்கிரஸ் – பிஜேபி கூட்டணிக்கு வாக்கு அளிக்கக் கூடாது.
  •  கடந்த 10 ஆண்டு பிஜேபி ஆட்சியில் ஒரே ஒரு திட்டம் கூட புதுச்சேரிக்கு என்று செயல்படுத்தப்படவில்லை.
  • மூடிய ஆலைகளை திறப்போம் என்று சொல்லிவிட்டு மிகப் பெரிய பஞ்சாலைகள், சர்க்கரை ஆலை, பாசிக் என அனைத்தை மூடிவிட்ட ஆட்சியாளர்கள் இவர்கள்.
  • ரேஷன்கடையே இல்லாத மாநிலமாக மாற்றி புதுச்சேரி மக்களை பசியில் வாட்டி வதைப்பவர்கள்.
  • பல ஆயிரம் கோடி மதிப்புள்ள மின்துறையை விற்க துடிப்பவர்கள்.
  • 5 முதல் 16 % இருந்த வரியை  18 – 28% மடங்காக உயர்த்தி அன்றாடம் நமது பணத்தை கொள்ளை அடிப்பவர்கள்.
  • மொத்த இந்திய வர்த்தகம் அரசு சொத்துகளை  (அம்பானி ஆதானி போன்ற ) மற்றும் இதர குஜராத்து கம்பெணிகளுக்கு தாரைவார்த்து நாட்டை கொள்ளை அடித்தகவர்கள்.
  • வாகன சட்டம் என்ற பெயரில் தினமும் வாகன ஓட்டிகளிடம் வழிபறி செய்வதோடு இன்சூரன்ஸ், டோல்கேட்  பல மடங்கு உயர்த்தியவர்கள்.
  • அரசு BSNLலை நிறுவனத்தை ஒழித்து விட்டு மொபைல் போன் கட்டணங்களை பலமடங்கு உயர்த்தி அம்பானி கொள்ளை அடிக்க வழி வகை செய்த மோசடி பேர்வழிகள்.
  • அனைவருக்கும் வங்கி கணக்கு என்று சொல்லி ATMமில் ஐந்து முறைக்குமேல் பணமெடுக்க கட்டணம், பேடிஎம் கட்டணம், மினிமம் பேலன்ஸ்  இல்லை என்ற பெயரில் வங்கி கொள்ளை செய்தவர்கள்.
  • 2016 – 2021 வரை புதுச்சேரி அரசை செயல்பட விடாமல் தடுத்து கிரண்பேடியை வைத்து ஒட்டுமொத்த புதுச்சேரியும் அழித்த கல்நெஞ்சம் படைத்தவர்கள்.
  • கொரோனா காலத்தில் புதுச்சேரிக்கு என்று ஒரு ரூபாய் கூட நிதி அளிக்காத கேடுகெட்ட ஆட்சியாளர்கள்.
  • கேபிள் டிவி கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியவர்கள்.
  • 350+40 ஆக இருந்த சிலிண்டர் விலையை 1200 வரை உயர்த்தியவர்கள்.
  • 45 ஆக இருந்த டீசல் இன்று 100 ஆக உயர்வு. 55 ஆக இருந்த பெட்ரோல் 100 ஆக உயர்வு.
  • அரசு நிலக்கரி கொள்முதலை ஒழித்து அதானி கொள்ளை அடிக்க மின் கட்டணத்தை வரலாறு காணாத அளவுக்கு உயர்த்தியவர்கள்.
  • பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி போன்ற நடவடிக்கைகள் மூலம் முறைசாரா துறை, சிறு குறு நடுத்தர தொழில்கள் அனைத்தும் நொறுங்கியுள்ளன.
  • தலித்துகள், இசுலாமியர் மீதான கொலை வெறித்தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
  • பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு அதிகரித்திருக்கிறது.
  • கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக பெருமளவில் விவசாய நிலங்கள் விவசாயிகளிடமிருந்து பறிக்கப்படுகின்றன.
  • விவசாயிகளும், விவசாய தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்து வாடுகின்றனர்.
  • புதுச்சேரியில் நீட் தேர்வு புதிய கல்விக் கொள்கையை திணித்தன் மூலம், மாணவர்களின் பள்ளி மற்றும் மருத்துவ, உயர் கல்வி கனவுக்கு உலை வைத்தனர்.
  • தொழிலாளர் விரோத சட்டங்களை கொண்டு வந்து தொழிலாளர்களும், சிறு தொழில் முனைவோரும் கடும் பாதிப்புக்குள்ளாகி தத்தளிக்கின்றனர். நடுத்தர மக்களும் கூட சங்கடங்களை சந்திக்க வேண்டியுள்ளது.
  • 1998 – 2004 மற்றும் 2014-2024 வரை என 16 ஆண்டுகால பாஜக ஆட்சியில் கார்கில் சவப்பெட்டி ஊழல், ஆயுத பேர ஊழல், நிலக்கரி ஊழல், பணமதிப்பு நீக்க ஊழல், உலகின் மிகப்பெரிய தேர்தல் பத்திர ஊழல், ரஃபேல் போர் விமான ஊழல்,  7.5 லட்சம் கோடி சிஏஜி அறிக்கை ஊழல் , பிஎம் கேர் நிதி ஊழல், அதானி அம்பானிக்காக அரசு சொத்துக்களை குறைந்தது விளக்கி விற்று அடித்த கொள்ளை   என ஊழலின் முடைநாற்றமாக சந்தி சிரிக்கிறது பாசிச பாஜக.
  • பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்த கம்யூனிஸ்ட் ஆதரவு வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள் தற்போது படிப்படியாக சமூக நீதியை ஒழித்துக் கட்ட தொடங்கி விட்டார்கள். சாதிவாரி கணக்கெடுப்புக்கு முட்டுகட்டை போட்டு பிற்படுத்தப்பட்ட மக்களை வஞ்சித்தவர்கள்.
  • புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் என்ற அமைப்புக்குப் பதிலாக, இந்தியா என்பது ஒரே நாடாக அறிவிக்கப்படும்; ஒரே நாடு – பாரத நாடு ஒரே மொழி சமஸ்கிருதம், ஒரே கலாச்சாரம் – பார்ப்பனிய கலாச்சாரம் என்பது தான் இவர்களின் இந்து விரோத கோட்பாடு.
  • பார்ப்பணிய சாதி ஆதிக்கம் – கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கமும்தான் – பிஜேபி ஆட்சி.
  • கடந்த 16 ஆண்டு கால பிஜேபி ஆட்சியில் குஜராத் படுகொலை தொடங்கி டெல்லி படுகொலை, முஸாபர் நகர், மணிப்பூர் கலவரம் காஷ்மீர் கலவரம் என நாடு முழுவதும் கலவரங்களையும் படுகொலைகளும் செய்து தான் கட்சியை வளர்த்து வருகிறது பாஜக அது இனியும் தொடர்வது ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் பேராபத்தாகும்.
மத்திய பாஜக அரசு கடந்த தேர்தலில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட நிறைவேற்றவில்லை.
  • வட்டி இல்லாமல் ரூ.1 லட்சம் வரை குறுகிய கால விவசாய கடன்.
  • 60 வயதான சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
  • நதிகள் இணைப்புக்கு தனி ஆணையம் உருவாக்கப்படும்.
  • அனைத்து மாநிலங்களுடன் ஆலோசித்து ஜிஎஸ்டி நடைமுறைகள் எளிதாக்கப்படும்.
  • வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டுக்கு தப்பித்து சென்றவர்களை நாட்டுக் கொண்டுவருவது. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவோம்,
  • விலைவாசியைக் குறைப்போம், கருப்புப் பணத்தை கண்டுபிடித்து ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் செலுத்துவோம்,
  • வேளாண் விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு தருவோம்

என அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் தண்ணீர் மேல் கோலமாக தடம் அழிந்து விட்டன.

தேர்தலுக்காக பொய்பேசி திரியும் திரு. என்.ரங்கசாமி

புதுவை ஆட்சி அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் என்.ரங்கசாமி, அதற்கு விலையாக மாநில உரிமைகளையும், மக்கள் நலன்களையும் காவுக் கொடுத்து, மத்திய ஆட்சியாளர்களிடம் சரணாகதி அடைந்து கிடக்கிறார்.

1967-ல் டெல்லியில் காமராஜரை உயிரோடு எரித்து கொல்ல முயற்சி செய்த சங்பரிவார் அமைப்போடு உள்ள பிஜேபியோடு. வாழும் காமராஜர் என்று தன்னை கூறிக்கொள்ளும் ரங்கசாமி கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் கூட்டணி வைத்துள்ளார்.

இதுவரை நான் என்ன செய்யமுடியும் மத்திய பாஜக அரசு அனுமதி தரமாட்டுது என்றவர் தற்போது ரேஷன் கடையை திறப்போம், மூடிய ஆலைகளை திறப்போம், சேதராப்பட்டு தொழிற்பேட்டையை உருவாக்கி 20 ஆயிரம் பேருக்கு வேலை தருவோம் என்று தேர்தலுக்காக பொய்பேசி வருகிறார்.

ஏற்கனவே பாஜகவோடு கூட்டணி வைத்து தனது கட்சிக்காரர்களை பாஜகவுக்கு விற்றுவிட்ட இவர். மேலும் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி சீட்டையும் பாஜகவுக்கு கொடுத்துவிட்டார். தற்போது ஒரே பாராளுமன்ற தொகுதியும் பாஜக கொடுத்துவிட்டார். அடுத்தது இவரிடம் கொடுப்பதற்கு முதல்வர் பதவி மட்டுமே எஞ்சி இருக்கிறது. இவர் கொடுக்கவில்லை என்றாலும் அதை அவர்கள் நிச்சயம் எடுத்துக் கொள்வார்கள் அவர்களுடன் கூட்டணி தொடர்ந்து நீடித்தால் நாடுமுழுவதும் பாஜக கட்சியோடு கூட்டணி வைத்த கட்சிகளின் இன்றைய நிலை நாளை அது ரங்கசாமிக்கும் நடக்கும்.

எனவே தேர்தலின் முதல் கட்டமான ஏப்ரல் 19ம் தேதி, புதுச்சேரியில் நடைபெற உள்ள தேர்தல் தேசத்தின் திசைவழியை தீர்மானிப்பதில் முக்கியப் பங்காற்றப் போகின்றது. கடந்த 10 ஆண்டு கால பாஜக ஆட்சியின் வேதனைகளை எண்ணிப் பார்த்து, புதுச்சேரியை அவர்கள் தொடர்ந்து வஞ்சித்த வரலாற்றைக் நெஞ்சில் நிறுத்தி, மாற்றத்தை நோக்கி அடி எடுத்து வைக்க கிடைத்திட்ட வாய்ப்பாக இந்தத் தேர்தலை பயன்படுத்திட வேண்டும்.​
திரு. என்.ரங்கசாமி -பாஜக-பாமக மற்றும் அதிமுக-தேமுதிக, இனவாத நாம்தமிழர் கட்சி ஆகிய இந்த சந்தர்ப்பவாதக் கூட்டணியை முறியடித்து, மத்தியில் மதச்சார்பற்ற அரசாங்கத்தை நிறுவி, இந்திய ஒருமைப்பாட்டைக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். இந்த உயரிய நோக்கோடும், புதுச்சேரி என ஒட்டுமொத்த இந்திய மக்களின் நலன் காக்கவும், திமுக, இடதுசாரிகள், மதச்சார்பற்ற கட்சிகள் இணைந்து இந்தியா அணியை ஏற்படுத்தி உள்ளன அதன் அங்கமாக புதுச்சேரி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியாக கம்பீரமாக உருவெடுத்து தேர்தல் களத்தில் உங்களின் ஆதரவு கோரி நிற்கின்றன.
இந்தியா கூட்டணியின் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெ.வைத்திலிங்கம் அவர்களுக்கு வாக்களிப்பீர்..! கை சின்னத்தில்..!
Election Cpim Puducherry (1) Election Cpim Puducherry (2) Election Cpim Puducherry (3) Election Cpim Puducherry (4)

Leave a Reply