கைத்தறி நெசவாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டம்.

கைத்தறி நெசவாளர்களுக்கு தடையின்றி பாவு- நூல் மற்றும் கூலி வழங்க கோரி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரியில் உள்ள கைத்தறி நெசவாளர்களுக்கு பாவு நூல் வழங்குதல், குறைந்தபட்ச கூலியாக ரூ.350 நிர்ணயம் செய்தல், ஆண்டு முழுதும் நெசவாளர்களுக்கு வேலை தர வேண்டும், பிரதம நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் தள்ளுபடி விலையில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய அனுமதி தர வேண்டும்.
கூட்டுறவுத்துறை பதிவாளர் மேற்பார்வையில் நூல் வங்கியை உருவாக்க வேண்டும், நெசவாளர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை கற்பிக்க வேண்டும், மழைக்கால மானியத்தை ரூ.1500-ல் இருந்து ரூ.3000-ஆக உயர்த்த வேண்டும்.

30 சதவீதம் ஊக்கத்தொகையை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும், பிரதம சங்கங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதியம், பணபயன் நிலுவைகளை உடனே வழங்க வேண்டும். தலைமைச் சங்கமான பாண்டெக்சில் உள்ள காலிப் பணியிடங்களில் பிரதம கூட்டுறவு சங்க ஊழியர்களை நியமிக்க வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி பிரதேச கைத்தறி தொழிலாளர்கள் (சிஐடியு ) சங்கம் சார்பாக கூட்டுறவுத்துறை பதிவாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கச் செயலாளர் ஆர்.குணசேகரன் தலைமை தாங்கினார். கைத்தறி சங்க கெவுரவத்தலைவர் தா.முருகன், தலைவர் ஆர்.ராஜாங்கம், சிஐடியூ பிரதேச தலைவர் கே.முருகன், மற்றும் நிர்வாகிகள் வி.மனோகரன், ஆனந்து, தேவி, வசந்தி. பி.சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர். திரளான கைத்தறி தொழிலாளர்கள் புதுச்சேரி அரசை எதிர்த்து முழக்கமிட்டவாரு கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply