ஜிப்மர் சேவை கட்டண வசூலுக்கு ஜிப்மர் பாதுகாப்புக்குழு  கண்டனம்.

தன்வந்திரி மருத்துவமனை 1956 ஆம் ஆண்டு பிரஞ்சுகாரர்களின் ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியில் ஆரம்பிக்கப்பட்டது. புதுச்சேரி மாநிலம், பிரஞ்சுகாரர்களின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று, இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு, 1964 ஆம் ஆண்டு “ஜவகர்லால் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமாக தரம் உயர்த்தப்பட்ட மருத்துவமனையாக அப்போதைய பாரத பிரதமர்  ஜவர்கர்லால் நேருவால் கட்டமைக்கப்பட்டது.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரி மக்களுக்கு மட்டுமின்றி, அதனைச் சுற்றியுள்ள தமிழக பகுதியான விழுப்புரம், கடலுார், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும், கேரளா, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட தென்மாநில மக்களுக்கும் உயர்தர சிகிச்சையை இலவசமாக அளிக்கக்கூடிய மருத்துவமணையாக  விளங்கி வருகின்றது.

ஜிப்மர் மருத்துவமனையை கடந்த 2008 ஆம் ஆண்டு தன்னாட்சியாக மாறுவதை எதிர்த்து, அந்த காலகட்டத்தில் ஒத்தகருத்துடைய அனைத்து கட்சிகளும் (விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட ஜிப்மர் பாதுகாப்பக குழு என்கிற பொது அமைப்பின் மூலமாக, மத்திய அரசை வலியுறுத்தி, மாநிலம் தழுவிய மக்கள் போராட்டங்களை நடத்தி, ஏழை, எளிய மக்களுக்கு பயன்தரக்கூடிய உரிமைகளை சட்ட பூர்வமாக பெற்றது.

அதன்படி  ஏழை,எளிய மக்களுக்கு மற்ற மத்திய அரசு மருத்துவமனையில் வழங்கப்படுவதுபோல இலவச மருத்துவம் வழங்கப்பட வேண்டும்.  இளநிலை மருத்துவடிப்பில், மொத்தம் உள்ள இடங்களில் 25% விழுக்காடு புதுச்சேரியை சார்ந்த ஏழை-எளிய நன்கு படிக்கக்கூடிய மாணவர்களுக்கு மருத்துவ இடங்கள் வழங்க வேண்டும்.  இளநிலை மருத்துவ படிப்புக்கான கட்டணம் மிகக்குறைந்த அளவில் வசூலிக்கப்பட வேண்டும்.

துணைநிலை ஆளுநருக்கு கண்டனம்

ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சியாக மாற்றம் பெற்ற பிறகு, தன்னுடைய உயரிய நோக்கமான அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச மருத்துவ சேவை என்கிற நிலை மாறி, ஏழை எளிய மக்களின் உயிரினை வாட்டி, வதைத்து பணம் பறிக்கின்ற செயலில் முழுமூச்சாக இறங்கியுள்ளது. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்மையில் போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை விமர்ச்சித்துள்ள துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு ஜிப்மர் பாதுகாப்புக்குழு வண்மையாக கண்டனம் தெரிவிக்கிறது. புதுச்சேரி ஜிப்மர் மக்களின் சொத்து அதை தனியாருக்கு தாரைவார்க்க ஒருபோதும் அனுமதிக்கமுடியாது.சுகாதார சேவை அனைவரின் உரிமை,ஜிப்மரை காப்பாற்றி அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற நிலையை ஒன்றிணைந்து மீட்டெடுக்க போராடுவோம்.

தா.முருகன், ஜிப்மர் பாதுகாப்புக்குழு தலைவர்

Leave a Reply