
மதச்சார்பற்ற கட்சி தலைவர்களின் ஆலோசணைக்கூட்டம் புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் புதன்கிழமை (செப்-28) நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் திமுக மாநில அமைப்பாளரும், புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவருமான ஆர்.சிவா, காங்கிரஸ் கட்சியின் பிரதேச தலைவர் சுப்ரமணி, நிர்வாகி வைத்தியநாதன்,எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் அ.மு.சலீம், நிர்வாகிகள் நாரா.கலைநாதன், சேதுசெல்வம், தினேஷ்பொன்னையா, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், தமிழ்ச்செல்வன், கொளஞ்சியப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி தனராசு, மதிமுக மாநில தலைவர் கபிரியேல், சிபிஐ எம்எல் கட்சி தலைவர் பாலசுப்பரமணியன், மனிதநேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் ராஜாமுகமது, இந்திய யூனியன் முஸ்லீம்லீக் கட்சி தலைவர் முகமது உமர்பாரூக் உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.