ரேஷன்கடைகளை திறக்கக்கோரி மாதர் சங்கத்தின் சார்பில் புதுச்சேரியில் நூதன போராட்டம் நடைபெற்றது.

மாதர் சங்கத்தின் சார்பில் நூதன முறையில் புதுச்சேரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுபுதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன்கடைகளை திறந்து அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்களை வழங்க வேண்டும். நூறுநாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்க வேண்டும். நுன்நிதி நிறுவனங்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்க வேண்டும். வின்னை முட்டும் விலைவாசி உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்ற நூதன போராட்டத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினர். செயலாளர் இளவரசி, நிர்வாகிகள் சத்தியா, உமாவிநாயகம், கலைச்செல்வி,கோமதி, பரிமளா, மலர்விழி, ஜானகி உட்பட திரளான பெண்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக மத்திய மாநில ஆட்சியாளர்களை கண்டித்து கோரிக்கை பதாகையுடன் நையாண்டி செய்தவாறு  போராட்டத்தில் பங்கேற்றனர்.புதுச்சேரியில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Leave a Reply