மனைப்பட்டா தொடர்பாக சிறப்பு கூட்டம் வேண்டும்

24.07.2008

பெறுநர்;: உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
புதுச்சேரி அரசு ,
புதுச்சேரி.

ஐயா!
பொருள்
மனைப்பட்டா தொடர்பாக தங்கள் முன்னிலையில் ஒரு சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடு- தேதி நேரம் வழங்கக் கோருதல் தொடர்பாக…

புதுச்சேரி மாநிலத்தில் பல ஆயிரம் மக்கள் வீடின்றி அல்லல் படுகிறார்கள். வீடற்ற மக்களுக்கு மனைப்பட்டா கேட்டு புறம்போக்கு இடங்களில் குடியிருப்போருக்கு பட்டா கேட்டு நகரத்தில் வீடற்ற மக்களுக்கு தொகுப்பு வீடு கட்டித்தரக் கேட்டு பல போராட்டங்கள் வாயிலாக தங்களுக்கு மனுக்கொடுத்துள்ளோம். பலமுறை இக்கோரிக்கையை வலியுறுத்தி தங்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளோம். மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தாங்கள் உறுதியளித்திருந்தீர்கள். உறுதியளித்ததின்படி சிலருக்கு வீட்டுமனைப்பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இதிலும் முறையாக கணக்கெடுப்பின்படி வீடற்ற மக்களுக்கு பட்டா கிடைக்கவில்லை. கிடைத்த சிலருக்கும் பாரபட்சத்துடன் முறைகேடான முறையில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.  இப்போக்கு திட்ட நோக்கங்களை சீர்குலைப்பதாகும். எனவே வீட்டு மனைகேட்டு கொடுக்கப்பட்டுள்ள மனுக்களை முறையாகப் பரீசீலித்து நேரில் கள ஆய்வு நடத்தி பாரபட்சம் இன்றி முறைகேடான சிபாரிசுகள் இன்றி வீட்டுமனைப்பட்டா வழங்க துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம் . இது தொடர்பாக தங்களிடம் நேரில் பேசிட ஒரு தேதி நேரம் குறித்துத் தரும்படி வேண்டுகிறோம்.

நன்றி

இங்ஙனம்

(v.பெருமாள்)
செயலாளர்

Leave a Reply