அமைப்புசாரா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராட்டம்

CITU அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை உதவித்தொகை உடனே வழங்ககோரி புதுச்சேரி சட்டப்பேரவை எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு தீபாவளி உதவித்தொகை  ரூ.5000 ஆயிரம் வழங்க வேண்டும். அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தை   செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பன கோரிக்கையை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி சட்டப்பேரவை  அருகில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு பிரதேச தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக காமராஜர்சிலை எதிரே துவங்கிய ஊர்வலத்தை துவக்கி வைத்து  சிஐடியூ பிரதேச  துணைத் தலைவர் கே.முருகன் பேசினார். இருதியாக ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மூத்த தொழிற்சங்க தலைவர் தா. முருகன் பேசினார். இப்போராட்டத்தில்  பிரதேச செயலாளர் சீனிவாசன்,  நிர்வாகிகள் ஜீவானந்தம், மணவாளன்,விஜயகுமார்,செந்தில்குமார்,வடிவேல்,வீரமணிகண்டன்,ஜேவியர்  உள்ளிட்ட திரளான அமைப்பு சாரா தொழிலாளர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் இறுதியில் முதல்வர் ரங்கசாமியை     சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றகொண்ட முதல்வர், இன்னும் ஒர் இரு நாட்களில் அதிகாரிகளை அழைத்து பேசி உதவித்தொகை அறிவிப்பதாக சங்க தலைவர்களிடம் உறுதி அளித்தார்.

Leave a Reply