சிஐடியு முதல் மகளிர் ஆட்டோ கிளை புதுச்சேரியில் உதயம்

imgசிஐடியு புதுவை பிரதேச ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் மகளிர் ஆட்டோ ஸ்டாண்ட் கிளையின் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது. வைசியாள் வீதி, ஆம்பூர் சாலை சந்திப்பில் நடைபெற்ற விழாவிற்கு மகளிர் கிளை தலைவர் சண்முகப்பிரியா தலைமை தாங்கினார்.சிஐடியு மாநில செயலாளர் சீனுவாசன் கலந்துகொண்டு புதிய பெயர் பலகையை திறந்து வைத்தார். முன்னதாக சங்க கொடியை மாநிலத் துணைத் தலைவர் மதிவாணன் ஏற்றி வைத்தார். ஆட்டோ சங்க மாநில தலைவர் மணவாளன், செயலாளர் விஜயகுமார், நிர்வாகிகள் துளசிங்கம்,செந்தில்குமார், நூர்முகமது, பழனிபாலன், கிளைச் செயலாளர் பரமேஸ்வரி உட்பட திரளான மகளிர் ஆட்டோ ஓட்டுநர்கள் விழாவில் பங்கேற்றனர்.

Leave a Reply