ம.பி. பாஜக ஆட்சியில் கல்வி நிலையங்களில் மதவெறிக் கும்பலின் அராஜக நடவடிக்கைகள்…

ஒன்றிய ஆட்சியாளர்கள் மதவெறி அடிப்படையில் சமூகத்தை எப்படி யெல்லாம் காவிமயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது இந்தூரில் அரசினர் புது சட்டக் கல்லூரி மற்றும் சில இடங்களில் நடந்துள்ள விஷயங்கள் மூலம் தெரிய வந்திருக்கின்றன. இவை மிகவும் சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கின்றன.

28இல் 4 அதிக எண்ணிக்கையாம்

இந்தூர் புது சட்டக் கல்லுரியில் ஆசிரியர் பணியிடங்களில் முஸ்லீம் களை முற்றிலுமாக ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிற விதத்தில் மதவெறி யர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகவும் மோசமான நிகழ்வாகும். ஆர்எஸ்எஸ்-இன் கீழ் இயங்கிவரும் ஏபிவிபி என்னும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தின் இக்கல்லூரிப் பிரிவானது அங்கே பணிபுரிந்து வரும் முஸ்லீம் ஆசிரியர்களுக்கு எதிராகப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. இந்தக் கல்லூரியில், முஸ்லீம் ஆசிரியர்கள், “மத அடிப்படை வாத சிந்தனைகளைப்” பிரச்சாரம் செய்கிறார்கள் என்று கூறி அதற்கு எதி ராக இவர்கள் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள். மேலும் இக்கல்லூரியில் அதிக எண்ணிக்கையில் முஸ்லீம் ஆசிரியர்கள் இருப்ப தாகவும் கூறி இதனை இவர்கள் கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். உண் மையில் அக்கல்லூரியில் மொத்தம் பணியாற்றும் 28 ஆசிரியர்களில், நான்கு பேர் மட்டுமே முஸ்லீம்களாகும். ஏபிவிபி-யின் தலைவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மனுவில், முஸ்லீம் ஆசிரியர்கள், வளாகத்திற்குள் “முஸ்லீம் மற்றும் இஸ்லாமியக் கலாச்சா ரத்தைப் பிரச்சாரம் செய்துகொண்டிருக்கிறார்கள்” என்று குற்றம் சாட்டியிருக்கின்றனர். மேலும் முஸ்லீம் ஆசிரியர்கள், மாணவிகளை உணவுவிடுதிகளுக்கும், சிற்றுண்டி விடுதிகளுக்கும் அழைத்துச் சென்று, “ஜிகாத் காதலையும்” தூண்டிக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அபத்த மான முறையில் கூறியிருக்கின்றன.

நடவடிக்கை எடுத்த முஸ்லிம் முதல்வர் மீதும் புகார்…

கல்லூரியின் முதல்வர், பேராசிரியர் இனமூர் ரஹ்மான், (இவரும் ஒரு முஸ்லீம்தான்), இந்த மனுவில் புகார் அளிக்கப்பட்டுள்ள நான்கு முஸ்லீம் ஆசிரியர்கள் மீதும் மற்றும் இருவர் மீதும் நடவடிக்கை எடுத்துள்ளார். அவர்க ளை ஐந்து நாட்களுக்கு ஆசிரியப் பணிக்கு வர வேண்டாம் என்று கூறி யிருப்பதுடன், புகாரின்மீது ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி ஒருவரால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார். இந்த நடவடிக்கையுடன் இவர்கள் திருப்தி அடைந்துவிடவில்லை. இப்போது புதிய குற்றச்சாட்டுகளை ஏபிவிபி மாணவர்கள் வீசி எறிந்து கொண்டிருக்கிறார்கள். முஸ்லீம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்த முஸ்லீம் முதல்வர்மீதும் இப்போது குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இவர், டாக்டர் ஃபர்கத் கான் என்பவர் எழுதிய “வன்முறையின் தொகுப்பு மற்றும் கிரிமினல் நீதிபரிபாலன அமைப்புமுறை” (“Collective Violence and Criminal Justice System”) என்னும் புத்தகத்தை வைத்திருக்கிறார் என்று குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள். இந்தப் புத்தகமானது ஆர்எஸ்எஸ்-க்கு  எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் கருத்துக்களைக் கூறியிருப்ப தாக அவர்கள் கூறியிருக்கிறார்கள். தான் கல்லூரியில் முதல்வர் பொறுப்பை 2019இல் ஏற்பதற்கு முன்பே, 2014இலேயே இந்தப் புத்தகமா னது கல்லூரியின் நூலகத்திற்கு வாங்கப்பட்டிருக்கிறது என்று அவர் விளக்கம் அளித்தபோதிலும்கூட, அவர்கள் அதனையெல்லாம் கண்டு கொள்ள விரும்பவில்லை. அவர் தன் பதவியை ராஜினாமா செய்வது வரை யிலும் கிளர்ச்சிகளைத் தொடர இருக்கிறார்கள்.

உள்துறை அமைச்சரின் ஆதரவுடனே…

ஏபிவிபி-யின் முறையீடுகளும், கிளர்ச்சியும் அம்மாநிலத்தின் உள் துறை அமைச்சர், நரோத்தம் மிஷ்ராவால் ஆதரிக்கப்பட்டுவருகிறது என்பதும், அவர்தான் காவல்துறையினரை அவற்றின்மீது நடவடிக்கை எடுக்கக் கட்டளை பிறப்பித்திருக்கிறார் என்பதும் இங்கே கவனிக்கவேண்டிய ஒன்றா கும். இதனை அடுத்து உள்ளூர் காவல்துறையினர் கல்லூரி முதல்வர்  மீதும், மற்றொரு ஆசிரியரான மிர்சா மொஜி மற்றும் அந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மற்றும் வெளியிட்டவர் மீதும் இந்தியத் தண்டனைச் சட்டம் 153-ஏ (இரு மதத்தினருக்கு எதிராக பகைமையை வளர்த்தல்), 295-ஏ (மத நம்பிக் கைகளை துவேஷத்துடன் நிந்தித்தல்) உட்பட இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டி ருக்கின்றன. மேலும், மேற்படி புத்தகத்தின் ஆசிரியர் டாக்டர் ஃபர்கத் கான் மற்றும் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உட்பட மூவருக்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம் முன் ஜாமீன் அளிக்க மறுத்ததால் அவர்களைக் கைது செய்திடக் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பணிநீக்கம் வழக்குப்பதிவு

இவ்வாறு, ஒருசில நாட்களிலேயே, முதல்வர் உட்பட அனைத்து முஸ்லீம் ஆசிரியர்களும், தாங்கள் வகித்தப் பொறுப்புகளிலிருந்து வலுக் கட்டாயமாக நீக்கப்பட்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கத்தின் மறைமுக ஒப்புதலுடன் இது நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏபிவிபி-யினர் அளித்தி டும் புகார்களின் அடிப்படையில் மதத் தீவிரவாதம் மற்றும் அதுபோன்ற  குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக என்றே உயர் கல்வி இயக்கு நரகத்தில் ஏழு உறுப்பினர்களைக் கொண்ட குழு ஒன்று அமைக்கப் பட்டிருக்கிறது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் மதச்சிறுபான்மை ஆசிரியர்கள் குறி வைத்து நீக்கப்படும் வேறு சில நிகழ்வுகளும் உண்டு. பஜ்ரங் தள உறுப்பினர்கள் அளித்த எண்ணற்ற புகார்களை அடுத்து, இந்த ஆண்டு அக்டோபர் மாதம் விடிசா  என்னுமிடத்தில் உள்ள ஒரு பள்ளியில் முஸ்லீம் முதல்வராக இருந்த திருமதி சாய்னா பிர்தௌஸ் என்பவர் நீக்கப்பட்டார். குணா மாவட்டத்தில் கிறித்தவ மிஷனரி பள்ளிக்கூடம் ஒன்றில் ஜஸ்டின் மற்றும் ஜாஸ்மினா காட்டூன்  என்கிற இரு ஆசிரியர்கள் மீது ஒரு மாணவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

முஸ்லிம் மாணவர்களை வதைக்கும் ஆசிரியர்கள்

முஸ்லிம் மாணவர்கள் அல்லது ஆசிரியர்களுக்கு எதிராக மதவெறி நட வடிக்கைகள் மற்ற மாநிலங்களிலும் நடந்துகொண்டிருக்கிறது. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் மணிபால் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியில் முஸ்லீம் மாணவர் ஒருவரின் பெயர் “கசாப் போன்று இருப்பதாகக்” கூறி அவருடைய ஆசிரியரால் அந்த மாணவர் தனிமைப்படுத்தப்பட்டு, கேலி  செய்யப்பட்டிருக்கிறார். ராஜஸ்தான் மாநிலத்தில் பார்னர் என்னும் ஊரில் உள்ள அரசுக் கல்லூரி ஒன்றில் ஓர் ஆசிரியர், வகுப்பில் பயின்ற ஒரே யொரு முஸ்லீம் மாணவியைச் சுற்றி வளைத்துக்கொண்டு,  முஸ்லீம் எதிர்ப்பு நச்சு கருத்துக்களை வீசியிருக்கிறார். இது தொடர்பாக அந்த மாணவி புகார் அளித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியருக்கு எதிராக எவ்வித மான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. புதிய கல்விக் கொள்கை மூலமாக மாணவர்களுக்கு புராதன பாரம் பரியப் பெருமைகளைப் பறைசாற்றுகிறோம் என்ற பெயரில் கல்வியை காவி மயப்படுத்துவது என்பதும் மோடி அரசாங்கத்தின் இலக்குகளில் ஒன்றா கும். இவ்வாறு காவிமயப்படுத்துவதன் நடவடிக்கைகளில் உடனடியாக இப்போது தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது சிறுபான்மை முஸ்லீம் ஆசிரி யர்களும் மாணவர்களுமாவார்கள்.

இரண்டாம் தரக்குடிமக்களாக…

bjpபாஜக ஆளும் மாநிலங்களில் அதிகாரப்பூர்வமாகவே இவை மேற்கொள் ளப்பட்டுவருகின்றன என்பனவற்றை, கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிந்துவரும் முஸ்லீம் மாணவிகள் அரசாங்கத்தால் நடத்தப்படும் கல்லூரிகளுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டதிலிருந்தும், மத்தியப் பிரதே சத்தில்  அரசாங்கத்தால் நடத்தப்படும் சட்டக் கல்லூரிகளில் முஸ்லீம் ஆசிரி யர்கள் பாடம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதிலிருந்தும், அவர்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதிலிருந்தும் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியும். இவ்வாறு நாட்டின் பொதுக் கல்வி நிறுவனங்களில் முஸ்லீம்கள் இரண்டாம்தர குடிமக்களாகத் தரம் தாழ்த்தப்பட்டுக்கொண்டிருப்பது இப்போது நடந்து கொண்டிருக்கிறது.     இந்தியா, 2023இல் ஜி.20 நாடுகளின் தலைமைப் பொறுப்பை ‘ஒரே உலகம்-ஒரே குடும்பம்-ஒரே எதிர்காலம்’ என்னும் முழக்கத்துடன் அதிகாரப்பூர்வமாக ஏற்க இருக்கிறது. “மனிதகுலம் முழுமையும் ஒரே  குடும்பமாக நல்லிணக்கத்துடன் மேம்பாடு அடைந்திடும் விதத்தில் இந்தியா இருந்திடும்” என்று மோடி படாடோபமாகப் பறைசாற்றியிருக்கி றார். ஆனால், இந்தியாவிற்குள் உள்ள பல்வேறு மதத்தினருக்கிடையே யும் மதவெறி அடிப்படையில் பிரித்தாளும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன.

இந்தூரா? இந்துத்துவா ஊரா?

ஒன்றிய அரசாங்கம் ஜி.20ஐ ஒட்டி நாட்டின் பல்வேறு நகரங்களில் எண்ணற்ற கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் என்று அறி வித்திருக்கிறது. இதில் ஒரு நிகழ்வு இந்தூரிலும் நடைபெறவிருக்கிறது.  இதே இந்தூரில்தான் மிகவும் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் முனவர் ஃபரூக்கி, அவருடைய நிகழ்ச்சிகள் இந்துக்களின் மனதைப் புண்படுத்து வதாக ஓர் இந்துத்துவா சங்கி கொடுத்த புகாரின்பேரில் கைது செய்யப் பட்டார். இதே இந்தூரில்தான் சென்ற ஆண்டு வளையல் வியாபாரி ஒருவ ரான தஸ்லீம் அலி என்பவர் இந்துக்கள் வசிக்கும் பகுதியில் வளையல் விற்றார் என்று கூறி மிகவும் மோசமான முறையில் அடித்து நொறுக்கப் பட்டார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு 107 நாட்கள் சிறையில்  அடைக்கப்பட்டிருந்தார். இந்த இந்தூர் நகரில்தான் இப்போது கண்ணியம் மிக்க சட்ட வல்லுநர்களும், ஆசிரியர்களும் அவர்கள் முஸ்லீம் என்ற கார ணத்தாலேயே வேட்டையாடப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஜி.20 நிகழ்வு இந்தூரில் நடைபெறும் சமயத்தில், இந்துத்துவா ஆட்சியா ளர்களின் உண்மை சொரூபமும், ‘அனைவரும் ஒரே குடும்பம்’ (‘வாசுதைவ குடும்பகம்’) என்னும் பாசாங்குத்தனமான பிரகடனமும் அம்பலப்படுத்தப்படும்.

டிசம்பர் 7, 2022, தமிழில் : ச.வீரமணி

Communal Targeting in Education 

Leave a Reply