மின்துறை தனியார்மயம்- பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டத்தை முறியடிக்க 1 லட்சம் குடும்பங்கள் சந்திப்பு- டிசம்பர் 13ல் மாபெரும் பேரணி.

புதுச்சேரி மக்களை இருளில் தள்ளிவிடும், மின்துறை தனியார்மயம்- பிரீப்பெய்டு மின் மீட்டர் திட்டத்தை முறியடிக்க 1 லட்சம் குடும்பங்கள் சந்திப்பு-
டிசம்பர் 13ல் மாபெரும் பேரணி.
அன்புடையீர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் புரட்சிகர வணக்கம். ஒன்றிய மோடி அரசு, பேரழிவு திட்டங்களை எல்லாம் முதலில் புதுச்சேரியில் அமலாக்கி வருகிறது. அந்த வரிசையில் மின்துறையை தனியாருக்கு விற்கவும், முன்பணம் செலுத்தி மின்சாரம் பெறுகின்ற திட்டத்தையும் அமல்படுத்த உள்ளனர். புதுச்சேரி மின்துறைக்கு 285 ஏக்கர் நிலம், 10க்கும் மேற்பட்ட துணை மின் நிலையங்கள், 74 ஆயிரம் மின் கம்பங்கள், 40 ஆயிரம் கிலோ மீட்டர் மின் கம்பிகள், 500 கோடி வைப்புத் தொகை, ஆக 20 ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மின் துறைய விற்க ஒன்றிய மோடி அரசும், புதுச்சேரி துணைநிலை ஆளுநரும், அமைச்சர் பெருமக்களும் துடியாய் துடித்து வருகிறார்கள். மின்துறையை வாங்க போகும் அதானி போன்ற நிறுவனத்திற்கு ஆதரவாக பல்வேறு நூதன கட்டணங்களை விதித்துக் கொண்டே வருகிறார்கள்.
நாம் வீட்டை பூட்டி வைத்திருந்தாலும் நிரந்தர சேவை கட்டணம், வீடுகளுக்கு ஒரு கிலோ வாட்டுக்கு 30 ரூபாயும். மற்றவைகளுக்கு 75 ரூபாயையும் மாதம்தோறும் மின் கட்டணத்திற்கு மேல் கூடுதலாக கட்டணங்களை விதித்து மக்களை வஞ்சிக்கிறது புதுச்சேரி அரசு.
ராஜஸ்தானை சேர்ந்த ஜெனஸ் பவர் இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்திடம் இருந்து ப்ரீபெய்ட் மீட்டர் வாங்க ரூபாய் 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மின் கட்டண இஷ்டம் போல் உயர்த்தப்படும். மின் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டிய கட்டாயமாக்கப் படுவதோடு, காலை, மாலை நேர மின் பயன்பாட்டிற்கு மிக அதிகப்படியான கட்டணமும் நடைமுறைப்படுத்த உள்ளனர்.
இதனால் பணம் இல்லாதவர்களுக்கு மின்சாரம் இல்லை என்ற நிலை ஏற்படுவதோடு விவசாயிகள், எளிய மக்களின் வீடுகள், குடிசைத் தொழில்களுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் பறிபோகும் ஆபத்தும் ஏற்படும். தற்போது பணியில் உள்ள ஆயிரக்கணக்கான அரசு மின்துறை ஊழியர்கள் தங்களது வேலையை இழப்பார்கள். மேலும் வேலையின்றி தவிக்கும் புதுச்சேரி இளைஞர்களுக்கு மின்துறையில் அரசு பணி இல்லாமல் போகும், புதிய இணைப்பு, பெயர் மாற்றம் பழுது பார்த்தல் என அனைத்து பணிகளுக்கும் கட்டணம் பல மடங்கு வசூலிக்கப்படும். தொழில் முனைவோர்கள், வர்த்தகர்கள் அனைவரும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாக நேரிடும். எனவேதான் இந்த திட்டத்தை கைவிட வலியுறுத்தி எங்கள் கட்சியின் முன்னெடுப்பில் ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தை அமைக்க தங்களை இந்த கடிதம் மூலம் சந்திக்கிறோம்.
எனவே தாங்களும் எங்களோடு தோளோடு தோளாக இணைந்து பொருளாதார அரச பயங்கரவாதத்திற்கு எதிராக அவர்களிடமிருந்து நம் புதுச்சேரி மக்களை பாதுகாக்க, கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்கள் பணத்தை பறிப்பதை தடுக்கவும் வீட்டை இருட்டாக்கி வேலைவாய்ப்பை ஒழிக்கவும் வழி வகுக்கும் இந்த மோசடி ப்ரீபெய்ட் மின் மீட்டர், மின்துறை தனியார்மயம் ஆகியவற்றை நாம் தடுத்து நிறுத்துவோம்.
எங்கள் கட்சியின் அகில இந்திய அரசியல் தலைமைகுழு உறுப்பினர் தோழர் ஜி. ராமகிருஷண்னன் அவர்கள் தலைலையில் வரும் 2023 டிசம்பர் 13ஆம் தேதி காலை 10மணிக்கு பெரியார் சிலை அருகிலிருந்து மாபெரும் பேரணியாக சென்று முதல் அமைச்சரை சந்தித்து மக்களுக்கு எதிரான இந்த திட்டங்களை கைவிட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெரும் போராட்டத்திற்கு அனைத்து வகையிலும் உதவி செய்த அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இங்ஙனம்
இரா.இராஜாங்கம்
(செயலாளர்)
தொடர்பு எண்: 9443003353
ப்ரீபெய்டு மின் மீட்டரை எதிர்த்து கையெழுத்திட இங்கே இந்த படத்தை சொடுக்கவும்.
Logo

Leave a Reply