இந்தியன் காபி ஹவுஸ்

இந்தியன் காபி ஹவுஸ் நிர்வாகத்தில் நடந்துள்ள ஊழல் தொடர்பாக புதுச்சேரி அரசும், கூட்டுறவுத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நெய்வேலியில் வெளியாட்களை வைத்து கிளையை மூடச்செய்த ஊழியர் மற்றும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும்.

கூட்டுறவு சங்க நிர்வாகக்குழு தேர்தலை நடத்த வேண்டும், ஆள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும், தொழிலாளர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும். கிளைகளை நவீனப்படுத்தி பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், ஊழல் புரிந்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு செயலாளர் ராமச்சந்திரன், ஐஎன்டியுசி தலைவர் தமிழ்ச்செல்வன், டிஎம்எஸ் தலைவர் திருமுருகன் கூட்டாக தலைமை தாங்கினர். கூட்டு பாதுகாப்புக் குழு நிர்வாகிகள் டி.முருகன், ராஜாங்கம், சந்தானசாமி, பிரதீப்குமார், மரியசூசை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply