பிளவுவாத பாஜகவை மக்கள் தோற்கடிக்க வேண்டும்

 ரேசன் கடையை மூடி  வைத்துள்ள என்.ஆர்.காங் கிரஸ்-பாஜக கூட்டணியின் சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்  தோற் கடிக்கப்பட வேண்டும் என்று புதுச்சேரி வாக்காளர் களுக்கு  ஆர்.ராஜாங்கம் வேண்டுகோள் விடுத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் கமிட்டி சார்பில் தேர்தல் நிதி யளிப்பு, அரசியல் விளக்க  பொதுக்கூட்டம் மதகடிப் பட்டு கடைவீதியில் நடை பெற்றது. இப்பொதுக் கூட்டத்திற்கு கமிட்டியின் செயலாளர் இரகு.அன்பு மணி தலைமை தாங்கினார். புதுச்சேரி மாநில செயலா ளர் ஆர்.ராஜாங்கம் பங்கேற்று பேசுகையில், 10  ஆண்டுகளாக  ஆட்சி நடத்தி  வரும் பாஜக அரசு நாட்டின் இயற்கை வளங்களை அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அடகு வைத்து, இன்றைக்கு ஊழலில் திளைத்துள்ளது. ஊழலை அங்கீகாரமாக்கிய கட்சி என்றால் பாஜக தான்.

கடந்த மூன்று ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆட்சி நடத்திவரும் என்.ஆர்.காங் கிரஸ்-பாஜக கூட்டணி அரசு மூடிய ரேசன் கடைகளை திறப்போம் என்று வாக்குறுதிகள் அளித்தனர். வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாமல் தற்போது மீண்டும் மக்களி டம்  வாக்கு கேட்டு வருகிறார் கள். மதரீதியாக மக்களை பிளவுப்படுத்தும்  பாஜக வை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

முன்னதாக பல்வேறு தரப்பட்ட மக்களிடம் வசூல் செய்யப்பட்ட தேர்தல் நிதியை ராஜாங்கம் பெற்று கொண்டார். கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர் ஜி.சீனுவாசன்,மாநிலக்குழு உறுப்பினர் சங்கர், கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம்,தட்சணாமூர்த்தி,ரகுநாத்,கந்தநாதன்,முத்து,நாகராஜ்,அமிர்தவள்ளி உட்பட பலர் பங்கேற்றனர்.Cpim Mannadipet

Leave a Reply