நெட்டில் எல்லாம் போய்த் தேடினேன்.  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் நல்ல கட்சி.

சங்கராபுரம் வட்டத்தில் கட்சியின் துணைக் குழு உறுப்பினர்கள் கூட்டத்திற்குச் சென்றேன்.
“இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஓர் அறிமுகம்” என்ற தலைப்பில் வந்திருந்த சுமார் 30 தோழர்களிடம் பேசினேன்.

கூட்டம் முடிந்து அனைவரும் கைகுலுக்கினர். செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.
சிரித்தும், புன்முறுவல் செய்தும் மனதுக்குள் இருந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
என்னை பஸ் ஏற்றிவிட வந்த தோழர் செல்லமுத்து சொன்ன தகவல் என்னை ஆச்சரியப்பட வைத்தது.

எனக்கு நல்ல தேநீர் வாங்கி கொடுத்து அவர் சொன்னார். “தோழரே நான் (தமிழகத்தில் பிரபலமான ஒரு கட்சியை குறிப்பிட்டு) அந்த கட்சியைச் சேர்ந்தவன். எனக்கு அந்தக் கட்சி நடவடிக்கைகள் கொஞ்சமும் பிடிக்கவில்லை. என்ன செய்யலாம் என்று இரண்டு ஆண்டுகளாக எதை எதையோ படித்தேன். நெட்டில் எல்லாம் போய்த் தேடினேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் நல்ல கட்சி. என்னுடைய நினைப்புக்கு ஏற்ற கட்சி. இதைப் போல் வேறு எந்த கட்சியும் இல்லை என்ற முடிவுக்கு வந்தேன். உடனே இந்த கட்சியில் சேரவேண்டும் என்று என்னோடு இருக்கிற அனைவரோடும் பேசினேன். மற்றவர்களும் நான் பேசியதை புரிந்து ஏற்றுக் கொண்டார்கள்.

இப்போது நாங்கள் எங்கள் ஊரில் சிபிஎம் கட்சிக் கிளையை துவக்கியுள்ளோம். நான் தான் கிளை செயலாளர். இன்றைக்கு உங்களின் விளக்கம் எனக்கு மேலும் தெளிவும், என்னுடைய எண்ணத்திற்கு வலுவும் சேர்த்திருக்கிறது. உடனே எங்கள் ஊரில் உள்ள  இளைஞர்களையும் இந்த கட்சியில் சேர்க்க வேண்டும். எங்கள் கிராமத்தைச் சுற்றியுள்ள, எனக்கு அறிமுகமானவர்களிடம் பேசி சிபிஎம் கட்சி துவக்க வேண்டும் என்ற மன உறுதி ஏற்பட்டிருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது தோழர்.  நன்றி தோழர்”
என்று சொன்னார். நெட்டிலெல்லாம் தேடினேன் என்று அவர் சொன்னது என்னை ஆச்சர்யப்பட வைத்தது.

கம்யூனிசம் வளரும்.
கம்யூனிசம் வளரும்.
கம்யூனிசம் தான் வளரும். 

சிபிஎம் வளர்க! புரட்சி ஓங்குக! மார்க்சியம் வெல்க!!
இன்குலாப் ஜிந்தாபாத்!
தோழர் ஆனந்தன்

Leave a Reply