புதுச்சேரி சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐக்கு மாற்றுக

 பத்திரிகை செய்தி    

 17.07.2015

புதுச்சேரியில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கும் பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்திய குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையில் புதுச்சேரி அரசும் காவல்துறையும் ஒன்றாக செயல்பட்டு மூடிமறைக்கு செயலை மார்க்சிஸ்ட் கட்சி வண்மையாக கண்டிக்கிறது.

புதுச்சேரி மக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இந்த  குற்றத்தில் தொழில் அதிபர்கள், அரசியல் செல்வாக்கு மிக்க நபர்கள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என வலுவான குற்றசாட்டு எழுத்தப்பின்னனியில் ஈடுப்பட்ட அனைவரும் கைது செய்யப்படவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இடசாரிகட்சிகள், மாதர், மாணவர், வாலிபர் அமைப்புகள், உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் போராடினார்கள். அதன் விளைவாக கடந்த 2014 மே மாதத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிபிசிஐடி காவல்துறையினர் விசாரனையை மேற்கொண்டனர். நீதிமன்றத்தின் தலையீட்டின் பெயரில் நடந்த அணிவகுப்பில்  காவல்துறையினர் 9பேர் ஈடுப்பட்டது தெரியவந்து.  அதன்பேரில் சம்பந்தப்பட்ட காவல்துறையினர்  தேடப்படும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டு சிலர் கைதும்  செய்யப்பட்டு பிறகு பினையில் விடுவீக்கப்பட்டனர்.

தலைமறைவாக இருந்தாக கூறப்படும் இதர காவல்துறையை சேர்ந்த குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.  இதில் அரசும் காவல்துறையினரும் ஒன்றாக இணைந்து நாடகமாடியது அம்பலமாகி உள்ளது. இச்செயல் புதுச்சேரி மக்களை கொதிப்படைய செய்து இருக்கிறது.

ஆகவே இனியும் இந்த வழக்கு புதுச்சேரி அரசின் கீழ் நியாயமாக செயல்பட வாய்ப்பில்லை ஆகவே இந்த வழக்கை சிபிஜக்கு மாற்றுதோடு இந்த வழக்கு சம்பந்தமான வெள்ளை அறிக்கை அரசு வெளியிவேண்டும் என மார்க்சிஸ்ட்  கட்சி கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்

ஆர்.ராஜாங்கம்

9443003353

புதுவை பிரதேச செயலாளர்.

Leave a Reply